top of page

Vekkai | வெக்கை - பக்கங்கள் 176

SKU: CSV0001085
₹125.00Price

Vekkai | வெக்கை

நூலாசிரியர் பூமானி | Poomani

 

 

 

சமூக நிலை பற்றிக் கோபமும் , மனித நேயமும் , கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி .
- சுந்தர ராமசாமி

சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ' வெக்கை ' ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது . ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப் ற்றியும் ஆராயும் முனைப்புக்கொண்ட ஒரு நாவல் என்று சொல்வது இந்த நாவலைப் பற்றிய ஒரு எளிய புரிதலாகவே இருக்க முடியும் . பூமணி எழுப்பும் கேள்விகள் இவற்றைக் காட்டிலும் முக்கியமானவை . ஒரு கலைஞன் என்ற முறையில் பூமணி பழியின் அரசியலையும் அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார் . இவ்வுலகின் மீதான , தான் வாழும் நிலத்தின் மீதான ஆச்சரியங்களிலிருந்தும் குழந்தைமையின் பேதமையிலிருந்தும் விடுபட முடியாத ஒரு பதினைந்து வயதுச் சிறுவனின் மனம் பழியின் கொழகொழப்பான திரவத்தால் நிரப்பப்படும் பயங்கரம் எளிய , மிருதுவான சொற்களால் கலைப்படுத்தப்பட்டிருக்கிறது . வெற்றி , தோல்வி பற்றிய புழக்கத்திலிருக்கும் சொற்களைத் தன் தணிந்த குரலால் மறுக்கும் ஒரு கலைஞன் அவற்றின் விளைவுகளைக் குறித்துத் தன் வாசகனோடு நிகழ்த்தும் மிகத் துக்ககரமான உரையாடல் எனவும் இந்நாவலைச் சொல்லலாம் .
- தேவிபாரதி

 

பக்கங்கள் 176

விலை ரூபாய் 125/-மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு

அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page