top of page

திருடன் மணியன்பிள்ளை / Thirudan Maniyin Pillai

நூலாசிரியர் ஜி.ஆர்.இந்துகோபன் / G R Indhugopalan

தமிழில்  குளச்சல் மு.யூசுப்


செய்யாத குற்றத்திற் காகச் சிறைத்தண்டனை அனு பவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது . திருட்டுகளில் ஈடுபடுகிறார் . இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை ; சாகசத் தன்மை கொண்டவை . போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர் , தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளாமல் தானாகவே வாதாடுவார் . இவரது குறுக்கு விசாரணைகள் , போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும் . ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும் . திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு தட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார் . பிறகு சலிம் பாஷா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார் . பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது . மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார் . மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வருமாக இருப்பதால் ' மாண்புமிகு ' கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது . இந்நிலையில் , இவர் மைசூரிலிருக் கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைதுசெய்கிறது . ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத் திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை .
 

திருடன் மணியன்பிள்ளை / Thirudan Maniyin Pillai - பக்கங்கள் 592

SKU: CSV0001100
₹690.00 Regular Price
₹655.50Sale Price

பக்கங்கள்: 592

வகை: மொழிபெயர்ப்புகள்

Author: ஜி.ஆர்.இந்துகோபன் (ஆசிரியர்), குளச்சல் மு.யூசுப் (தமிழில்)

Publisher: Kalachuvadu Pathippagam

bottom of page