தெற்குவாசல்: கடல் நடுவே ஒரு களம் - பக்கங்கள் 416
தெற்குவாசல்: கடல் நடுவே ஒரு களம் (இலங்கை குறித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள்) - பக்கங்கள் 416
நூலாசிரியர் பிரமிள்
இலங்கைத் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக எழுத்தாளராகவே வாழ்ந்து எழுதி மறைந்தவர் பிரமிள். அவரது வாழ்விலும் படைப்பிலும் 'நாஸ்டால்ஜியா' வெளிப்பட்டது இல்லை . என்றாலும் அவரது கவிதைகளிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் இலங்கை பற்றிய விசாரம், பெருமளவுக்கு இருந்தே வந்துள்ளது. இத்தொகுப்பில், பிரமிளின் மொத்த எழுத்துக்களில் இருந்து இலங்கை சம்பந்தப்பட்ட படைப்புகள் மட்டும் ஆய்வுப் பார்வையுடன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்தியத் தமிழ் மண்ணிற்கும் ஈழத்திற்கும் இடையிலான வெளியில் அலைந்துகொண்டிருந்தவர் பிரமிள். 'தானற்ற வெறுமையையும் துயிலற்ற மௌனத்தையும்' என்றும் வேண்டி நின்ற ஒரு முழுமையான இந்திய மனநிலையில், தான் சார்ந்த நிலத்தின் அவலத்தை அவதானிப்பதாக அமைகின்றன பிரமிளின் இந்தப் படைப்புகள்.
Genre: Literature and Fiction
விலை ரூபாய் 350/மட்டுமே
புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்
+91 73585 77246 / 88709 40330
San's புக் ஷெல்ப்


